search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் கழிப்பறை"

    • நெசவு தொழிலை பிரதானமாக செய்து வரும் இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகளாக உள்ளனர்.
    • இப்பகுதியில் பெண்களுக்கு கழிப்பிடம் இல்லாததால் திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் சுமார் 7,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நெசவு தொழிலை பிரதானமாக செய்து வரும் இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகளாக உள்ளனர்.

    இப்பகுதியில் பெண்களுக்கு கழிப்பிடம் இல்லாததால் திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    மலை அடிவாரத்தில் கழிப்பறை அமைக்க ப்பட்டது. ஆனால் இரவு நேரத்தில் அங்கு செல்ல பெண்கள் அச்சமடைந்து வருகின்ற னர். எனவே ஊருக்குள் நவீன கழிப்பறை கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • பங்காரம் கிராமத்தில் பெண்கள் கழிவறை செயல்படாத நிலையில் இருக்கின்றது.
    • தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் பெண்கள் காலை கடன் முடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் பங்காரம் கிராமத்தில் பெண்கள் கழிவறை செயல்படாத நிலையில் இருக்கின்றது. கடந்த 2008-ம் ஆண்டு மக்கள் வரிப்பணத்தில் பல லட்சம் செலவில் பங்காரம் கிராமத்தில் பெண்களுக்கு கழிவறை கட்டப்பட்டது. ஆனால் சில வருடங்களாகவே போதிய பராமரிப்பு இல்லாததால் பெண்கள் கழிவறையை பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது. இதனால் பெண்கள் காலைக்கடன் முடிப்பதற்கு இடமில்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். கள்ளக்குறிச்சி, சின்னசேலம், பங்காரம், கனியாமூர், தொட்டியம், இந்திலி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் திறந்த வெளியில் பெண்கள் காலை கடன் முடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். பெண்களின் சிரமத்தை புரிந்து கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். பூட்டி இருக்கக்கூடிய கழிவறையை சுத்தம் செய்து பெண்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×